ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஜூலை 22 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அலுவலகப் பிரிவுகளிலுள்ள கிணறுகளில் டெங்கு குடம்பியை அழிக்கும் (உண்ணும்) மீன் இனங்கள் இடும் வேலைத்திட்டம், வியாழக்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த வருடம் ஆரம்பத்தில் டெங்குத் தொற்றுக்கு அதிகமாக இலக்கான பகுதிகளான மஹ்ரூப் நகர், அண்ணல் நகர் , மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடு மற்றும் பொதுக் கிணறுகளில் இந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .