Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசிம்
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி 15,16 வயதுடைய சிறுவர்கள் இருவர், பலியாகியுள்ளதாக, உப்புவெலி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது 16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (வயது 15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களான மேற்படி இருவரும் இன்று பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில், இருவரின் சடலங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், உப்புவெலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
46 minute ago