Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்,எப்.முபாரக்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் காரொன்றும் பஸ்ஸொன்றும் இன்றுக் (11)காலை மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர், மூதூர் தள வைத்தியசாலையிலும் இருவர் கிண்ணியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியாவிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பஸ்ஸும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே, இவ்விபத்து இடம் பெற்றதாக பொலிஸ் ஆரம்ப கட்டவிசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
37 minute ago
2 hours ago