அப்துல்சலாம் யாசீம் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, முன்னாள் அம்பாறை மேல் நீதிமன்றத்தின் நீதவானும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதவானாகக் கடமையாற்றிய நீதவான் சந்திர ஜெயதிலக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவால் நேற்று (07) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்து, புதிய நியமனங்களை வழங்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பீ.டபிள்யூ.டி.சி.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago