அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில், திருகோணமலை, கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில் இன்று (19) குடிநீர் திட்டமொன்றை, பௌத்த சாசன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்தார்.
சீன நாட்டினுடைய நிதியுதவியுடன் பௌத்த சாசன நட்புரவு அமைப்பின் வேண்டுகோளின் படி, 35 இலச்சம் ரூபாய் பெறுமதியில் இக்குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சீனத் தூதரகத்தின் தூதுவர் மற்றும் பௌத்த சாசன நட்புணர்வு அமைப்பின் தலைவர் சுமிதி தர்மவர்தன, சேறுவில தொகுதி அமைப்பாளர் சுனில்சாந்த ரணவீர மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .