2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

Janu   / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) பதிவாகியுள்ளது .

ஈச்சிலம்பற்று , இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா ராசா (வயது35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன் பகையொன்றை  தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே இவ்வாறு 
 கூரிய ஆயுதங்களால் தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது .

மேலும்  , சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும்  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும்  ஈச்சிலம்பற்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

தீஷான் அஹமட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X