Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள வேளையில் கசிப்பு காய்ச்சும் கோடாவினைத் தன்வசம் வைத்திருந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக இன்று வியாழக்கிழமை(9) சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜாவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரியின் வழிகாட்டலில் விசேடபொலிஸ் குழுவினர் தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன் போது வீரமுனை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை 6 லீட்டர் கோடாவுடன் கைதானார்.
இவ்வாறு கைதானவரை நாளை(10) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
10 minute ago