ஏ.எம்.ஏ.பரீத் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா கல்வி வவலயத்தின் முள்ளிப்பொத்தானை கல்விக் கோட்டத்துக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.ஆர்.எம்.சுபையிர், இன்று (14) ஒய்வுபெற்றார்.
தனது, 60ஆவது வயதில் ஓய்வுபெறும் ஏ.ஆர்.எம்.சுபையிரின் பிரியாவிடை வைபவம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹட்லெப்பையின் தலைமையில் வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .