2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்த முயற்சி: இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூன் 27 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரையும், அடுத்தமாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம். றிஸ்வான், இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.

சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X