2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட கடற்கரைச்சேனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் பொலிஸாரும் திருகோணமலை மாவட்ட  மின்சார சபை அதிகாரிகளும் இணைந்து இன்று திங்கட்கிழமை மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .