2025 மே 15, வியாழக்கிழமை

சம்பூர் அபிவிருத்திகளை ஜனாதிபதி திறந்து வைப்பார்

Princiya Dixci   / 2017 மே 13 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எப்.முபாரக்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு, எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையையும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள சம்பூர் கலாசார மண்டபம் மற்றும் கடற்கரைப் பூங்கா ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைட்டங்களை பார்வையிட்ட பின்னர், இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

23 ஆளனியுடன் உள்ள இவ்வைத்தியசாலையில் தாதியர் விடுதி, வைத்தியர் விடுதி, நோயாளர் விடுதி , வெளிநோயாளர் பிரிவு கொண்ட முக்கிய பிரிவுகள் இவ்வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அனைத்து விதமான வைத்திய வளங்களும் வழங்கப்பட்டு, சீர் செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சம்பூர் பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த கடற்கரை பூங்கா மற்றும் கலாசார மண்டப வேலைத்திட்டங்களையும், வைத்தியசாலைக் கட்டட வேலைத்திட்டங்களையும் உரிய அதிகாரிகளுடன் விரைந்து பார்வையிட்டு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அது தொடர்பாக உரியவர்களிடமும் தொடர்புகொண்டதுடன் இவ்வேலைத்திட்டங்களை மிக அவசரமாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடரஜான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் உசைனுடீன், மாகாணப் பணிப்பாளர் முருகானந்தன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் கயல்வெலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் யூ.எல் வாஹிட், கிழக்கு மாகாண சுகாதர அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயீம், பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .