Editorial / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த மொஹமட் இஸ்மாயில் மொஹமட் மின்பாக், தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவானாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்ற இவர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் இந்தியா பல்கலைக்கழகத்திலும் கலைமானிப் பட்டம் பெற்றுள்ளார்.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராகவும் சமுர்த்தி முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ள இவர், சேருவில, தோப்பூர், கிண்ணியா, மூதூர் பிரதேச மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார்.
இவ்வாண்டு, இலங்கையின் தேசிய அபிமானியாகவும் இவர் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .