Mithuna / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் புதன்கிழமை (28) வீசிய சுழல் காற்று காரணமாக தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராமசேவகர் பிரிவின் பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கும், கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் வீடுகளின் கூரைகள் மற்றும் பலன் தரும் மரங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதுடன், குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளதால் அடுத்த மழை பெய்தால் எங்கே செல்வது எனவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறும் பதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025