2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஜனாசா வாகன​த்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் ஜனாசா வாகனம் இன்மையால் மக்கள் பெரும் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக தூர இடங்களிலும் மாவட்டத்துக்கு வெளியிலும் வைத்தியசாலைகளிலும் ஏற்படும் மரணங்களின் போது, ஜனாசாவைக் கொண்டு வருவதற்கான வாகன ஏற்பாடுகள் இல்லை என்பதையும் மக்கள் கவலையடைகிறனர்.

இதனை கருத்திற்கொண்டு கிண்ணியாவில் இருக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட உரியவர்கள், இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜனாசா வாகனமொன்றைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X