2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டைனமைட்டுடன் ஒருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் பகுதியில் உள்ள மர்கஸ் வீதியில் வைத்து நேற்று (07) இரவு சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் டைனமைட் 1 கிலோ 800 கிராமுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத டைனமைட்டுடன் ஒருவர் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரை, மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X