ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் மோதியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், முனைச்சேனை பெற்றோல் விநியோக நிலையத்துக்கு அருகாமையில் நேற்று முன்தினம் (07) மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவியின் பின்னால் வந்த டிப்பர் மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற மனைவியே படுகாயமடைந்துள்ளார் எனவும் டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
9 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
3 hours ago