2025 மே 19, திங்கட்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரத்தடி சந்தியில் உள்ள வளவொன்றுக்குள் இருந்து நேற்றிரவு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 54, எம்.எம் துப்பாக்கி ரவைகள் 02 என்பன மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மலசலகூடம் கட்டுவதற்காக வேண்டி அவ்வீட்டு உரிமையாளர் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ரவைகள் இருப்பதை கண்டுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X