Gavitha / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.புஹாரி
தோப்பூர், இக்பால்நகர் பிரதேசத்தில் பயிரிடப்பட்ட நிலக்கடலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, நிலக்கடலை செய்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதன்பிரகாரம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கொத்து நிலக்கடலை தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கின்றனர்.
இதனால், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தோப்பூர் பிரதேசத்துக்கு வருகை தந்து நிலக்கடலையை கொள்வனவு செய்து வரவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோப்பூர் பிரதேசத்தில் நிலக்கடலை நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் செய்கை செய்யப்படுகின்றமையினால்,இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு கொத்து நிலக்கடலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக, செய்கையாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago