2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசி திருடன் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் 7,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை திருடிய 28 வயது மதிக்கத்தக்க இளைஞரை  எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (30) உத்தரவிட்டார்.

வீட்டு உரிமையாளர், சேருநுவர பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X