Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (01) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், தந்தையை மகன் பொல்லால் தாக்கியதுடன், மகனை தந்தை இரும்புக் கம்பியால் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
நிலாவெளி, வாழையூற்று பகுதியைச்சேர்ந்த தந்தையான எம்.எஸ்.அப்துல் ஹஸன் (50 வயது) மற்றும் அவரது மகனான முகம்மட் நவ்பர் (20 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், கைகலப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .