2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தாயைத் தாக்கிய மகனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில், பணம் கேட்டு, தனது தாயைத் தாக்கிக் காயப்படுத்திய மகனை, ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (22) உத்தரவிட்டார்.

காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், தான் உழைத்துச் சேகரித்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தாயிடம் கொடுத்துள்ளார். பின்பு அப்பணத்தைத் தாயிடம் கேட்ட போது, பணம் இல்லை என்று கூறியதையால், தாயின் தலையிலும் கையிலும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X