Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் யோகா வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தின நிகழ்வு, திருகோணமலை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்போதே, இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்களின் நன்மை கருதி இந்த யோகா வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த திருகோணமலை வளாக முதல்வர் வ.கனகசிங்கம், இனிவரும் நாட்களில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் யோகாப் பயிற்சி நடைபெறும் எனவும் கூறினார்.

2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026