J.A. George / 2019 ஜூலை 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (16) வழிபடச் சென்ற பக்தர்கள் மீது இனந்தெரியாதவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றிய சம்பவம் தொடர்பில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேநீர் சாயங்களை ஊற்றியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது.
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago