2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

குடும்பப் பராமரிப்பு வழக்குத் தொடர்பில் மூதூர் நீதிமன்றத்துக்கு சமூகமளித்து மதுபோதையில் சாட்சியமளித்ததுடன், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஒருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதவான் ஜ.எம்.றிஸ்வான், இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.

32 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்கின்ற இவர், பராமரிப்புப் பணத்தை செலுத்தாமல் வந்துள்ளார். இது சம்பந்தமாக பொலிஸார் அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர் இவ்வாறு நீதிமன்றத்துக்கு இடைஞல் விளைவிக்கும்; வகையில் நடந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .