2025 மே 15, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2017 மே 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மட்கோ கடலில் நீராடிக்கொண்டிருந்த   சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்கோ, முஹம்மதிய்யா நகரைச் சேர்ந்த  டி.எப்.சர்பான் (வயது 16) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தனது நண்பர்களுடன் இன்று முற்பகல் இச்சிறுவன் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன்போது, இச்சிறுவனும் அவரது நண்பர் ஒருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இருப்பினும், அவரது நண்பர் காப்பாற்றப்பட்ட அதேவேளை, இச்சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .