2026 மார்ச் 21, சனிக்கிழமை

நபரொருவதைத் தாக்கியவருக்கு ஒரு வருட சிறை

Thipaan   / 2016 ஒக்டோபர் 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலையில் நபரொருவரைத் தடியால் தாக்கிக் காயமேற்படுத்திய, திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவருக்கு, ஒரு வருட சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ, இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.                              

குறித்த சந்தேகநபர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை பிரதேசத்தில் ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை நீதிமன்ற நீதவான், அவருக்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X