2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பண மோசடி செய்தவர் கைது

எப். முபாரக்   / 2018 மே 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரொருவர், நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், வாத்தியாகமப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபர், பிறிதொரு நபரிடம் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை  கடனுக்குப்  பெற்றுக்கொண்டு, அதைச் செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையில், பணம் வழங்கியவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X