2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பன்றியிறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, அக்போபுரப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 12 கிலோகிராம் பன்றி இறைச்சி வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,   கந்தளாய் நீதிமன்ற நீதவான், நேற்று (25)  உத்தரவிட்டார்.

சந்தேகநபர், அக்போபுர, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரெனவும், அவர், தனது வீட்டில் பன்றி இறைச்சியை வைத்திருந்தாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அபராதம் விதித்ததுடன், பன்றி இறைச்சியை எரித்துவிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .