Gavitha / 2016 மார்ச் 20 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிப்பொத்தானை-இல 269 - 08ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அப்துல் சௌர்தீன் என்பவருடைய EP JR-9807 என்ற இலக்கத்தையுடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், முச்சக்கரவண்டியின் உரிமையாளர், தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இதனுடைய தொடர்புடைய எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago