2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99 ஆம் கட்டைப் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 51 வயது நபரும் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .