2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற நபரொருவரை நேற்று ஞாயிற்றுக்கி​ழமை (30) கைது செய்ததாக, கந்தளாய் பொலிஸார்  தெரிவித்தனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேருநுவர கங்கைப்பகுதியில் இருந்து, அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகமொன்றில் மணலைச் ஏற்றிச் சென்ற போதே, குறித்த நபரை போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.          


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .