2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மரை இறைச்சி விற்றவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  வீட்டில் வைத்து மரை இறைச்சியை விற்பனை செய்துவந்த நபரொருவரை, இன்று (03) காலை, கைதுசெய்துள்ளதாக மொறவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.

மொறவெவப் டி-01 பகுதியைச் சேர்ந்த கோபால் இலிங்கராஷா (52 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

119 இலக்கத்தினூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வீட்டை சோதனையிட்ட போது 16 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டு, நபரையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X