Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலபொல பிரதேசத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மாடுகளை வெட்டிக் காயப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேருநுவர நீலபொல பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றிற்குள் புகுந்த இருவர் 20 மாடுகள் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
இவற்றுள் 7 மாடுகளின் நிலமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் இவற்றின் சிலவற்றின் வயிற்றில் இளம் கன்றுகள் உள்ளதாகவும்,இதனால் சுமார் 8 இலட்சம் ரூபாய்களுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்பு காவலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026