2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மாடுகளை காயப்படுத்திய இருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலபொல பிரதேசத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மாடுகளை வெட்டிக் காயப்படுத்திய ​இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேருநுவர நீலபொல பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றிற்குள் புகுந்த  இருவர் 20 மாடுகள் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். 

இவற்றுள் 7 மாடுகளின் நிலமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் இவற்றின் சிலவற்றின் வயிற்றில் இளம் கன்றுகள் உள்ளதாகவும்,இதனால் சுமார் 8 இலட்சம் ரூபாய்களுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்பு காவலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X