2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை உயிரிழப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் மின்சார பொறியில்  காட்டு யானை சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம்  சனிக்கிழமை (02) பதிவாகியுள்ளது.

குறித்த காட்டுப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்சார கம்பிகள் பயன் படுத்திருக்கலாம் என பொலிஸார்  தெரிவித்துள்ளதுடன் சூரியபுர பகுதியில் குப்பை மேடு அமைந்துள்ளதால் யானைகளில் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காட்டு யானை இறந்துள்ள பகுதியில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X