2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முதியவரின் சடலம் மீட்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, செல்வநாயகபுரப் பகுதியில் முதியவர் ஒருவ​ரின் சடலம் நேற்று (04) மாலை உப்புவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வநாயகபுரம், அந்தோணியார் வீதியைச் சேர்ந்த, 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து கோவிந்தன் (வயது -52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவரை காணாத நிலையில் அவரது உறவினர்கள்  தேடிய போது, பூட்டப்பட்ட அறையொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இவரது உடல் , முகம் எறும்புக் கடியினால்  பாதிக்கப்பட்டு காணப்பட்டதாகவும், இவர் கடந்த திங்கட்கிழமை (02)  உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X