Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
திருகோணமலை - கப்பல்துறை கிராமத்தில், வியாழக்கிழமை (13) இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 16 பேரையும், சரீரப் பிணையில் செல்லுமாறு, திருகோணமலை பதில் நீதவான் ஏ.அன்சார் நேற்று(15) உத்தரவிட்டுள்ளார்.
மோதல் சம்பவத்தில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானதுடன், இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டனவென பொலிஸில் முறையிடப்பட்டது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களை, நேற்று முன்தினம் மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago