Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
George / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமாா், பொன்ஆனந்தம்
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு (13) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், திரியாய்- 05ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த காளியப்பன் செல்லப்பிள்ளை (65 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விரட்டிச்சென்ற நிலையில், யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
(படங்கள்:பதுர்தீன் சியானா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago