Gavitha / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

- தீசான் அஹமட்
தேசிய கமத்தொழில் வாரத்தை முன்னிட்டு மூதூர் கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்ட மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் மூதூர் ஜின்னா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்ட பயிர்கள் செய்யும் விவசாயிகளுக்கு திங்கட்கிழமை (10) வீட்டுத்தோட்டச் செய்கைக்கான விதைகள்,மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு வீட்டுத்தோட்டம் தொடர்பிலான செயன்முறை விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதமஅதீதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், திருகோணமலை மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் பீ.கே.சிராஜ்,மூதூர் கமநல சேவை உத்தியோகத்தர் எம்.சாபி மற்றும் மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026