2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் மோட்டார் சைக்கிள் படுகாயம்

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (24) காலை, திருகோணமலையிலிருந்து, மூதூருக்குச் செல்லும் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.

படுகாயமடைந்தவர் திருகோணமலை-சீ.யூ. வீதியைச்சேர்ந்த டி.சௌந்தர ராஜா (46வயது) எனவும் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஐர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X