Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியகமப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன், 20 கசிப்பு வடிசாராய போத்தல்களுடன், இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர், கசிப்பு சாராயம் விற்பனை செய்வதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் கந்தளாய் குளத்துக்கு அருகாமையிலுள்ள வெவசிறிகமப் பகுதியில் நடத்திய சுற்றி வளைப்பு சோதனையின் போது குறித்த நபரிடமிருந்து கசிப்பு வடிசாராய போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, நாளை புதன்கிழமை (20) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .