2025 மே 14, புதன்கிழமை

வெளிச்ச வீடு அமைக்க கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் பெரிய கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வெளிச்ச வீடு இன்மையால் மீனவர்கள் பெரிதும் சிரமப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இம்மீன்கள்,  வள்ளங்கள் படகுகள் மூலம் இரவில் மீன்பிடித்து கரையேறுவதற்கு வசதியாக இவர்களின் படகுகளில் திசையறிக் கருவிகளும் இல்லாததால் திசைமாறிச் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதால், இவர்கள் கரையேறுவதற்கும் இரவில் கடலுக்கு சென்று திரும்பிவர வசதியாகவும் வெளிச்ச வீடு ஒன்றை அமைத்துதருமாறு, உரிய அதிகாரிகளிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X