Editorial / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டத்தில், நேற்று (31) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோய்ன் வைத்திருந்த மூவர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை 4 ஆம் கட்டைப் பகுதியில் 570 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரையும், 50 மில்லிகிராம் ஹெரொய்ன் வைத்திருந்த நபரொருவரையும், சங்கமம் கிராமத்தில் 50 மில்லிகிராம் வைத்திருந்த நபரொருவரையும், பொலிஸார் கைதுசெய்தனர்.
சந்தேகநபர்கள் மூவரும், மேலதிக விசாரணைகளுக்காக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .