Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் செல்வந்தரொருவரின் மகன் 24 வயதான வாய்பேச முடியாத பெண்ணை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பதில் நீதவான் சரித்த நாணயக்கார நேற்று உத்தரவிட்டார்.
இந்தப் பெண் வர்த்தகரின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றியவர். ஒரு நாள் வீட்டில் வேறு எவரும் இல்லாத நேரத்தில் வர்த்தகரின் மகன் தனது அறைக்கு இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்.
மேற்படி பெண் இது குறித்து மாத்தறை பொலிஸ் மகளிர் பிரிவில் புகார் செய்ததையடுத்து, பொலிஸார் சந்தேக நபரான இளைஞனை கைதுசெய்து நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோது, இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .