2024 மே 20, திங்கட்கிழமை

ஐ.ம.சு.மு தேர்தல் காரியாலயத்தின் மீது சூடு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் டி.வி.உபுலின் தேர்தல் காரியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் துப்பாகிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் காரியாலயம் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் தனது தேர்தல் காரியாலயத்தை பெலியத்தை தங்காலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று திறந்துள்ளனார். ஆயுதம் தாங்கிய குழு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X