2024 மே 09, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (31) 2.20க்கு  இடம்பெற்ற இவ்விபத்தில் 24 வயதுடைய இந்துனில் கருணாரத்ன என்பவரே காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான மற்றைய மோட்டார்சைக்கிளின் சாரதியைக் கைது செய்துள்ள ஹிக்கடுவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X