Princiya Dixci / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, கொஸ்கொட கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் (05), பெண்ணொருவருடன் நீராடச் சென்ற வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த நபரை மீட்ட பிரதேச மக்கள், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேதப் பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago
2 hours ago