2025 மே 07, புதன்கிழமை

PT-6 பயிற்சி விமானம் தரையில் விழுந்தது; விமானி பலி

Editorial   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமான படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் கந்தளாய் சூரியபுர  ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனக்குடா வான்படை முகாமிலிருந்து புறப்பட்ட விமானத்தின் கட்டுப்பாட்டு நிலையத்துடனானா தொடர்புகள், சீனக்குடா-கந்தளாய் வான்பரப்பில் அற்றுப்போனதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

குறித்த பயிற்சி விமானத்தில் பயிற்சி விமானி விமானி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்துக்குள் சிக்கியுள்ள விமானியை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர் உயிரிழந்த நிலை மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X