Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 13 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நீண்டகால உறவை எடுத்துக்காட்டிய சம்பந்தன், கடந்த காலங்களில், தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு, தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக, இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், எழுபது ஆண்டுகள் கடந்தும், இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது குறித்தும் குறிப்பிட்டார்.
சமகால அரசாங்கம், இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன், சுய கெளரவம் மற்றும் சமத்துவ அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக, சமாதானமான ஒரு தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் இந்தப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வை, புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாகவும் சரியானதாகவும் செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் காணப்படும் தேவைகளை வலியுறுத்திய அதேவேளை, தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை, வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பிரதமரிடம் கோரினார்.
மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர்செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தாய்லாந்து முதலீட்டாளர்களினால், வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பான முன்னேற்பாடுகளை வரவேற்ற சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மேலும், மிகக் கடினமான உழைப்பாளிகளைக் கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில், பாரிய பின்னடைவை யுத்தம் ஏற்படுத்தியுள்ளதை எடுத்துரைத்த இரா. சம்பந்தன், புதிய முதலீடுகள், வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாது, முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்துப் பிரதமர், நிச்சயமாக, தாய்லாந்துத் தனியார் முதலீட்டாளர்களை, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதாக உறுதியளித்த அதேவேளை, எதிர்காலத்தில், இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்து, அவற்றுக்கு ஆதரவு நல்குமாறு, எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago