J.A. George / 2021 ஜனவரி 13 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், இதனை உறுதிப்படுத்த முடியாத நிலையில் ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்தபின்னரே அதனை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த விடயம் பாரிய பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளதுடன், புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கருதப்படும் நபர் கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago