2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் கொரோனாவால் 08ஆவது மரணம் பதிவானது

Editorial   / 2020 மே 04 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 08 மரணம் இன்று (04) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 519பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X